இலங்கையில் ஜனநாயகத்தில் இன்றே மிகவும் மோசமான நாள் - ஜேர்மன் தூதுவர்

இலங்கையில் ஜனநாயகத்தில் இன்றைய நாள் மிகவும் மோசமான நாள் என ஜேர்மனியின் தூதுவர் ஜோர்ன் ரோஹெடே கூறியுள்ளார்.


நாடளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் ஒரு நீண்ட பெருமை கொண்ட ஜனநாயக பாரம்பரியம் உள்ளது.

ஆனால் இன்று சபாநாயகர் மீதான தாக்குதல் நடத்துவதும் வாக்குகளைத் தடுப்பதும் தான் ஜனநாயகமாக இருக்கின்றது” என பதிவிட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Germany  #Embasi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.