27ஆம் திகதி மீண்டும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு ஆரம்பம்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12ஆம் திகதி முதல், எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து 12ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்திருக்க வேண்டிய போதிலும் திங்கட்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக சட்ட தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, தனக்கும், மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுவினருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கையாளப்பட வேண்டிய அதிக வேலையின் காரணமாக குறித்த அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வழமை போல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த அகழ்வு பணிகளின் போது இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Mannar #Samintha-Rajapaksa

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.