ஆலய வழிபாட்டுக்கு சென்ற பெண்களிடம் நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினத்தன்று ஆலய வழிபாட்டுக்கு சென்ற மூன்று பெண்களிடமிருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


கல்வியங்காடு, பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு வேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று  திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

மேலும் கொக்குவில் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு வழிப்பாட்டுக்கு சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.