விமானத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்

அமெரிக்க விமானத்தில் வைத்துநடுவானில் பெண்ணிடம்பாலியல் சீண்டல் செய்த தமிழகத்தை சேர்ந்தவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தை சேர்ந்த,பிரபு ராமமூர்த்தி, அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியுடன் சுற்றுலா சென்றிருந்த அவர், விமானத்தில் திரும்பிய போது, அருகே அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். கண்விழித்து பார்த்தபோது, தனது ஆடைகள் கலைந்திருந்ததையும், தன்னை பிரபு சீண்டியதையும் பார்த்து அழுதுகொண்டே விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளி என நிரூபணம் ஆனதால், அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றம் அந்த பகுதியில்நடந்ததே இல்லை என்பதால், அதிகபட்ச தண்டனை வழங்க அரசு தரப்பில் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எச்1பி விசாவில், சுந்தர் ராமமூர்த்தி அங்கு சென்றிருந்தார். தண்டனை காலம் முடிந்தபின், அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.