கொஞ்சம் கம்முன்னு இருங்க சாஸ்திரி; கடுப்பான கம்பீர் !!

கடந்த 20 வருடங்களில் தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்திற்கு, கவுதம் கம்பீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


விராட் கோஹ்லி தலைமையிலான தற்போதைய இந்திய அணி குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த 20 வருடங்களில் இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி தான் சிறந்தது என்று தெரிவித்திருந்தார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்திற்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் கவுதம் கம்பீரும் இணைந்துள்ளார்.

இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், "ரவி சாஸ்திரி தனது வாழ்நாளில் எதை பெரிதாக சாதித்து விட்டார் என்பது தெரியவில்லை. ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை பார்க்கும் போது அவருக்கு கிரிக்கெட்டை உற்று நோக்கும் தன்மை கூட இல்லை என்று தான் தோன்றுகிறது. எதையும் சாதிக்காதவர்கள் தான் இது போன்று பேசுவார்கள்" என்று காட்டமாக பேசியுள்ளார் கம்பீர்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.