ரணிலுடன் பணியாற்ற அமெரிக்கா விருப்பம்
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்ததைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேர்ட் பல்லாடினோ அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
”கடந்த பல வாரங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசமைப்பு நெறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வகையில் தீர்வு கண்டமைக்காக இலங்கையின் அரசியல் தலைமையை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்தோ- – பசுபிக்கின் மிகப் பெறுமதியான பங்காளராக இலங்கை இருக்கிறது. மேலதிக ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு விவகாரங்களில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், அவரது அமைச்சரவையுடனும் இணைந்து முன்நோக்கிச் செயற்படுவதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்’ என்றும் அவர் தெரிவிததார்.
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேர்ட் பல்லாடினோ அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
”கடந்த பல வாரங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசமைப்பு நெறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வகையில் தீர்வு கண்டமைக்காக இலங்கையின் அரசியல் தலைமையை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்தோ- – பசுபிக்கின் மிகப் பெறுமதியான பங்காளராக இலங்கை இருக்கிறது. மேலதிக ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு விவகாரங்களில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், அவரது அமைச்சரவையுடனும் இணைந்து முன்நோக்கிச் செயற்படுவதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்’ என்றும் அவர் தெரிவிததார்.
கருத்துகள் இல்லை