மைத்திரியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
நாட்டின் அரசமைப்பையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்திய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை, 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி வீட்டுக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் விடுதலை முன்னணி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவால் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கக்கோரும் தீர்மான வரைவின் மீது நேற்றுப் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
காலில் விழவேண்டும்
கடந்த மூன்றாண்டுகளில் பகலில் அரச தலைவர் மைத்திரிபாலவுடனும், இரவில் மகிந்தவுடனும் இருந்த சூழ்ச்சிக்காரக் கும்பலின் சூழ்ச்சி ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி பகலில் அரங்கேறியது. தான்தோன்றித்தனமான தனது அதிகாரத்தை தக்க வைக்கவே மைத்திரி இந்தச் சூழ்ச்சியை அரங்கேற்றினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் எடுத்த முயற்சிகளின்போது சபாநாயகரை மிகவும் இழிவாகப் பேசினார்கள். சபாநாயகரின் கதிரையையும், சபாபீடத்தையும் சிதைத்தார்கள். அப்படிச் செய்தவர்கள், தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் அறிவித்ததும், சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என்கின்றார்கள். இந்தச் சூா்ச்சிக் கும்பல் சபாநாயகரின் காலில் விழுந்து வணங்கவேண்டும். சபாபீடத்தில் மண்டியிடவேண்டும்.
முதுகெலும்பு இல்லை
திருட்டு வழியில் தலைமை அமைச்சராகச் சென்றவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இன்று போராடும் நிலமை உருவாகியுள்ளது. ஜனநாயகத்தின் பலத்தை அவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுகணமே மகிந்த உள்ளிட்டோர் தாமரை மொட்டில் இணைந்தனர். ஆனால், இன்று இணையவில்லை என்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு முதுகெலும்பு இருக்கவேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தை கைவிடவில்லை
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, சிலருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுக்க முடியாது என்று கூறிவருகின்றார். அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. மைத்திரிக்கு ஆதரவாக இருந்தால் பதவிகளைக் கொடுக்க முடியும். எதிராக இருந்தால் பதவி கொடுக்க முடியாதென கூறுகிறார். இது தவறானது.
அரசமைப்புக்கு முரணானது. அரச தலைவர் அவரது அரசியலுக்காக நிறைவேற்று அதிகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார். 50 நாள் சூழ்ச்சிகள் முடிந்துள்ளபோதும், அமைச்சரவையை நியமிக்க முடியாதுள்ளனர். தனது பதவியைத் தக்க வைக்க அவர் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார்.
வாக்குறுதிகள் காற்றில்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர். அரச தலைவர் தேர்தலின் போது பேரம் பேசுவதற்கான சில வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், ஜே.ஆர்க்கு பின்னர் வந்த எவ்வொரு அரச தலைவரும் வாக்குறுதிகளை மாத்திரமே அளித்தனர். மைத்திரியும், மகிந்தவும் அவ்வாறு பல விதமான வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால், எவருமே அதனை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் எதிர்ப்பின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியே வடக்கு – கிழக்கை ஜே.ஆர். இணைத்தார்.
அரச தலைவர் ஒருவர் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டாலும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது. அரச தலைவர் தேர்தலில் மாத்திரமே அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பதவிக்குத் தெரிவாகிய பின்னர் மாறிவிடுவார்கள். அளவுக்கு அதிகமாக குவிந்துள்ள அதிகாரங்ளால் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசமைப்பையும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் அழிவுக்கு உட்படுத்துகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் தலைமை அமைச்சரின் கீழான ஆட்சியே தேவையாகவுள்ளது.
நிறைவேற்று அதிகார முறைமைகளால்
மக்கள் உரிமையைக் காக்க முடியாது
1977ஆம் ஆண்டுக்கு முந்திய ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டணி ஆட்சியே அமைக்கப்பட்டன. அங்கு ஏனைய கட்சிகளுக்கும் மதிப்பளிக்கும் நிலையும், அவர்களின் கருத்தை உள்வாங்கும் நிலையும் காணப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளில் இம்முறையே பின்பற்றப்ப டுகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களும் தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் சில வாக்குறுதிகளை நம்பி நிறைவேற்று அதிகார ஒழிப்புக்கு எதிராகவுள்ளனர். பேருவளை, திகனையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது நிறைவேற்று அதிகாரத்தால் தடுக்க முடிந்ததா?. அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள மாத்திரமே அரச தலைவர் பதவி நல்லது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது.
முடிவு கட்டவேண்டும்
ஜே.ஆர். அரச தலைவராகச் செயற்படும்போது, சிறீமாவோவின் உரிமையைப் பறித்திருந்தார். அதேபோல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் நாட்டுக்கும், கட்சிக்கும் அல்ல பதவிக்காகவே பயன்படுத்தப்படும். நிறைவேற்று அதிகாரம் கட்சியின் ஜனநாயகத்தையும் பறித்துவிடுகிறது.
கட்சியினுள் கருத்துச் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லாதுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு பல தடவைகள் மக்கள் ஆணைகள் கிடைத்துள்ளன. அவை பொய் வாக்குறுதிகளாகவே இருந்துள்ளன. இதற்கு முடிவுகட்ட வேண்டும். நாங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை அனைத்துக் கட்சிகளிதும் திருத்தத்துடன் நிறைவேற்றத் தயாராகவுள்ளோம்.
வெகுவிரைவில் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி அரசமைப்பையும் நாட்டின் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் விடுதலை முன்னணி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவால் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கக்கோரும் தீர்மான வரைவின் மீது நேற்றுப் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
காலில் விழவேண்டும்
கடந்த மூன்றாண்டுகளில் பகலில் அரச தலைவர் மைத்திரிபாலவுடனும், இரவில் மகிந்தவுடனும் இருந்த சூழ்ச்சிக்காரக் கும்பலின் சூழ்ச்சி ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி பகலில் அரங்கேறியது. தான்தோன்றித்தனமான தனது அதிகாரத்தை தக்க வைக்கவே மைத்திரி இந்தச் சூழ்ச்சியை அரங்கேற்றினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் எடுத்த முயற்சிகளின்போது சபாநாயகரை மிகவும் இழிவாகப் பேசினார்கள். சபாநாயகரின் கதிரையையும், சபாபீடத்தையும் சிதைத்தார்கள். அப்படிச் செய்தவர்கள், தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் அறிவித்ததும், சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என்கின்றார்கள். இந்தச் சூா்ச்சிக் கும்பல் சபாநாயகரின் காலில் விழுந்து வணங்கவேண்டும். சபாபீடத்தில் மண்டியிடவேண்டும்.
முதுகெலும்பு இல்லை
திருட்டு வழியில் தலைமை அமைச்சராகச் சென்றவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இன்று போராடும் நிலமை உருவாகியுள்ளது. ஜனநாயகத்தின் பலத்தை அவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுகணமே மகிந்த உள்ளிட்டோர் தாமரை மொட்டில் இணைந்தனர். ஆனால், இன்று இணையவில்லை என்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு முதுகெலும்பு இருக்கவேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தை கைவிடவில்லை
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, சிலருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுக்க முடியாது என்று கூறிவருகின்றார். அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. மைத்திரிக்கு ஆதரவாக இருந்தால் பதவிகளைக் கொடுக்க முடியும். எதிராக இருந்தால் பதவி கொடுக்க முடியாதென கூறுகிறார். இது தவறானது.
அரசமைப்புக்கு முரணானது. அரச தலைவர் அவரது அரசியலுக்காக நிறைவேற்று அதிகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார். 50 நாள் சூழ்ச்சிகள் முடிந்துள்ளபோதும், அமைச்சரவையை நியமிக்க முடியாதுள்ளனர். தனது பதவியைத் தக்க வைக்க அவர் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார்.
வாக்குறுதிகள் காற்றில்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர். அரச தலைவர் தேர்தலின் போது பேரம் பேசுவதற்கான சில வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், ஜே.ஆர்க்கு பின்னர் வந்த எவ்வொரு அரச தலைவரும் வாக்குறுதிகளை மாத்திரமே அளித்தனர். மைத்திரியும், மகிந்தவும் அவ்வாறு பல விதமான வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால், எவருமே அதனை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் எதிர்ப்பின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியே வடக்கு – கிழக்கை ஜே.ஆர். இணைத்தார்.
அரச தலைவர் ஒருவர் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டாலும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது. அரச தலைவர் தேர்தலில் மாத்திரமே அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பதவிக்குத் தெரிவாகிய பின்னர் மாறிவிடுவார்கள். அளவுக்கு அதிகமாக குவிந்துள்ள அதிகாரங்ளால் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசமைப்பையும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் அழிவுக்கு உட்படுத்துகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் தலைமை அமைச்சரின் கீழான ஆட்சியே தேவையாகவுள்ளது.
நிறைவேற்று அதிகார முறைமைகளால்
மக்கள் உரிமையைக் காக்க முடியாது
1977ஆம் ஆண்டுக்கு முந்திய ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டணி ஆட்சியே அமைக்கப்பட்டன. அங்கு ஏனைய கட்சிகளுக்கும் மதிப்பளிக்கும் நிலையும், அவர்களின் கருத்தை உள்வாங்கும் நிலையும் காணப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளில் இம்முறையே பின்பற்றப்ப டுகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களும் தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் சில வாக்குறுதிகளை நம்பி நிறைவேற்று அதிகார ஒழிப்புக்கு எதிராகவுள்ளனர். பேருவளை, திகனையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது நிறைவேற்று அதிகாரத்தால் தடுக்க முடிந்ததா?. அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள மாத்திரமே அரச தலைவர் பதவி நல்லது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது.
முடிவு கட்டவேண்டும்
ஜே.ஆர். அரச தலைவராகச் செயற்படும்போது, சிறீமாவோவின் உரிமையைப் பறித்திருந்தார். அதேபோல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் நாட்டுக்கும், கட்சிக்கும் அல்ல பதவிக்காகவே பயன்படுத்தப்படும். நிறைவேற்று அதிகாரம் கட்சியின் ஜனநாயகத்தையும் பறித்துவிடுகிறது.
கட்சியினுள் கருத்துச் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லாதுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு பல தடவைகள் மக்கள் ஆணைகள் கிடைத்துள்ளன. அவை பொய் வாக்குறுதிகளாகவே இருந்துள்ளன. இதற்கு முடிவுகட்ட வேண்டும். நாங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை அனைத்துக் கட்சிகளிதும் திருத்தத்துடன் நிறைவேற்றத் தயாராகவுள்ளோம்.
வெகுவிரைவில் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி அரசமைப்பையும் நாட்டின் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – என்றார்.
கருத்துகள் இல்லை