பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணியை
கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கோட்டை ரயில் நிலைய முன்றலில் வைத்து பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் மாணவர்கள் இன்று பிற்பகல் எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.
பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.