மீண்டும் ஸ்மித்

தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் திட்டமிட்டு பந்தினை சேதப்படுத்தியதன்
காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கு தயாராகிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
சிட்னியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்மித், “மிக மோசமான காலத்தை நான் சந்தித்துவிட்டேன். நான் என் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவே எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் நான் முன்னேறிக்கொண்டே இருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே என் நோக்கமாக இருக்கும். இன்னும் மூன்று மாதங்களில் என் தண்டனைக்காலம் முடிவதால், உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் நான் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கேப்டனாக இருந்து வரும் டிம் பெய்ன்(டெஸ்ட்) மற்றும் ஆரோன் ஃபின்ச்(ஒருநாள் போட்டி) ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்” என்று கூறினார்.
பந்தினை சேதப்படுத்தியதற்காக தண்டனை கொடுக்கப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் முன்பு வெடித்து அழுததன் பின்பு இப்போது தான் ஸ்மித் மனம் திறந்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.