வடக்கு மாகாண சபை எதையும் வெட்டி வீழ்த்தியதாக அறியேன் – சி.வி.கே.
வடக்கு மாகாண சபையின் 134 அமர்வுகளில் 132 அமர்வுகளுக்கு தலைமை தாக்கியுள்ளேன். ஆனால் என்னவோ அங்கு எவையும் வெட்டி வீழ்த்தப்பட்டதாகஎனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், மனித உரிமைகள் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
வடக்கு மாகாண சபையைப் பற்றிப் பேசினால் அது கஸ்டமான விடயம்தான். நாம் வெற்றியடைந்துவிட்டோம் என்று கூறிப் பீற்றிக்கொள்ளும் நிலமையை கடந்த 5 ஆண்டுகளில் எட்டவில்லை. அவைத் தலைவர் என்ற வகையில் சபையை முரண்பாடுகளுக்கு உள்ளேயே ஒரு உடன்பாட்டோடு நிறைவு செய்துள்ளேன்.
ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணில் அரசியல் வாதிகள் செயற்படாத காலத்தில் மக்களுடைய அபிலாசைகளை, எண்ணக்கருக்களை கருத்தில் கொண்டு போர் நிலைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததை நான் நினைத்துப் பார்க்கின்றேன். இந்த நிறுவனங்கள் மக்களுடைய தேவைகளுக்காகச் செயற்பட்ட காலம் அது. பின்னர் அரசியல்வாதிகளுடைய பிரசன்னத்தின் பின்னர் அந்தக் கோணத்திலான செயற்பாடு சற்றுக் குறைவு என்று நினைக்கின்றேன். அது தவறாகவும் இருக்கலாம்.
எங்கள் நிறுவனங்கள் எங்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அரும் பணியைச் செய்கின்றன. மனித உரிமைகள் என்பது இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. நான் என்னுடைய உரிமைகளுடன் இந்த மண்ணில் வாழவேண்டும் என்ற உரிமையைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இப்போது மனித உரிமைகளின் வலுவாக்கம் தேவைப்படுகின்றது – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், மனித உரிமைகள் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
வடக்கு மாகாண சபையைப் பற்றிப் பேசினால் அது கஸ்டமான விடயம்தான். நாம் வெற்றியடைந்துவிட்டோம் என்று கூறிப் பீற்றிக்கொள்ளும் நிலமையை கடந்த 5 ஆண்டுகளில் எட்டவில்லை. அவைத் தலைவர் என்ற வகையில் சபையை முரண்பாடுகளுக்கு உள்ளேயே ஒரு உடன்பாட்டோடு நிறைவு செய்துள்ளேன்.
ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணில் அரசியல் வாதிகள் செயற்படாத காலத்தில் மக்களுடைய அபிலாசைகளை, எண்ணக்கருக்களை கருத்தில் கொண்டு போர் நிலைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததை நான் நினைத்துப் பார்க்கின்றேன். இந்த நிறுவனங்கள் மக்களுடைய தேவைகளுக்காகச் செயற்பட்ட காலம் அது. பின்னர் அரசியல்வாதிகளுடைய பிரசன்னத்தின் பின்னர் அந்தக் கோணத்திலான செயற்பாடு சற்றுக் குறைவு என்று நினைக்கின்றேன். அது தவறாகவும் இருக்கலாம்.
எங்கள் நிறுவனங்கள் எங்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அரும் பணியைச் செய்கின்றன. மனித உரிமைகள் என்பது இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. நான் என்னுடைய உரிமைகளுடன் இந்த மண்ணில் வாழவேண்டும் என்ற உரிமையைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இப்போது மனித உரிமைகளின் வலுவாக்கம் தேவைப்படுகின்றது – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை