விஜயகலாவுடன் காதல்- கொந்தளிக்கும் வீரவன்ஸ
சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் புலிகள் அமைப்பின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று பகிரங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக நாடாளுமன்றில் நாம் குரல் கொடுத்தோம்.
அதையடுத்துத் தான் வகித்த அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரன் விலகினார். புலிகளை ஆதரித்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.
தற்போது ரணில் அரசில் அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை அரச தலைவர் மீளப் பெற வேண்டும். இல்லையேல் அவர் மீண்டும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்துவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை