அன்பேசிவம் அமைப்பால் உலர்உணவுப் பொருட்கள் உதவி!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அன்பேசிவம் அமைப்பால் உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு அன்பேசிவம் அமைப்பால் 23.12.2018 ஞாயிற்று கிழமை அன்று உலர்உணவுப் பொருட்கள்,உடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலை,முன்பள்ளி,பொதுமண்டபங்களில் வாழும் பேராறு, கரவேலன் கண்டல் கிராமங்களை சேர்ந்த மக்களின் தேவைகளை அறிந்து அன்பேசிவம் அமைப்பு மனிதாபிமான அவசர நிவாரணப் பணிகளை செய்துள்ளது. இவ் மனிதாபிமான பணிகளின்போது உலகத்தமிழ் மாணவர் ஓன்றியம், பிரதேசசெயலாளர்,கிராம உத்தியோகஸ்தர், அரச சார்பற்ற உத்தியோகஸ்தர்கள், அன்பேசிவ தொண்டர்களோடு இணைந்து உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.. இவர்களுக்கு சூரிச் அருள் மிகு சிவன் கோவில் அன்பே சிவத்தின் அன்பான நன்றிகள்.
செய்தி தாயகத்திலிருந்து அன்பே சிவத்தின் தொண்டன் பாணு.



#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.