ரஜினி, கமல்: திமுகதான் கவலைப்பட வேண்டும்!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து திமுகவும் மற்ற கட்சிகளும்தான் கவலைப்பட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


வரும் மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த், தனது பெயரில் தொலைக்காட்சித் தொடங்க பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை ராயபுரத்தில் இன்று (டிசம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகையால் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சியும் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கவுள்ளார். எனவே அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது திமுகவும் மற்ற கட்சிகளும்தான். கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் வாக்குகளையோ அல்லது மற்ற கட்சிகளின் வாக்குகளையோதான் பிரிப்பார். இதனால் எங்களுடைய ஓட்டுக்கள் பிரியாது” என்று தெரிவித்தார்.

திரிபுரா போல தமிழகத்திலும் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது தமிழகத்தில் சாத்தியமா என்னும் கேள்விக்கு, “அனைவரும் தங்களுடைய கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புவர். அது தவறில்லை. ஆனால் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். தமிழகத்தில் அதிகமுறை ஆட்சி செய்தது அதிமுகதான், வரும்காலத்திலும் அதிமுகதான் ஆட்சியமைக்கும். நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராகவே உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.