கனடா மண்வாசனை அமைப்பு வெள்ள நிவாரண உதவி

நேற்று கிளிநொச்சியில் பெய்த கடும் மழையினால் இடம்பெயர்ந்து சிவபாதகலையகத்தில் வசிக்கும் பொன்னகரைச்சேர்ந்த எழுபது
குடும்பங்களுக்கான அத்தியாவசிய உதவிகள் கனடா தமிழ்த்தேசிய அவையின் மண்வாசனை அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவினால் வழங்கப்பட்டது. மேற்படி பணியினை ஒழுங்குபடுத்தி உதவிய முன்னணியின் அறிவியல் நகர் மனிதாபிமானப்பிரிவுச்செயற்பாட்டாளர் திரு.அரிகரன் பொதிகளை ஒழுங்குபடுத்திய திலகநாதன் கிந்துஜன் ஆகியோருக்கும் மண்வாசனை அமைப்பிற்கும் நன்றிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.