கொழும்­பில் துப்­பாக்­கிச் சூடு ஒரு­வர் சாவு; மூவர் காயம்!

கொழும்பு மோதரைப் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். மூவர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

நேற்று புதன்­கி­ழமை காலை 8.15 மணி­ய­ளவில் இடம்பெற்ற இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் அலு­வ­ல­கம், கொழும்பு மோதரை பகு­தி­யில் இந்த துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. இதில் நால்­வர்; படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.
சிகிச்சை பய­னின்றி ஒரு­வர்; உயி­ரி­ழந்­துள்­ளார். உயி­ரி­ழந்­த­வர் மோதரை ஹேன­முல்ல பகு­தி­யைச் சேர்ந்த 32 வய­து­டைய தினேஸ் எரங்க என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார். இவர் குறித்த பகு­தி­யில் முச்­சக்­கர வண்டி ஓட்­டு­ன­ராக பணிப்­பு­ரிந்து வந்­துள்­ளார். துப்­பாக்­கிச் சூட்­டில் இவரே இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளார்.
உந்­து­ரு­ளி­க­ளில் வந்த இரு­வரே மேற்­படி துப்­பாக்­கிச் சூட்டை நடத்தி தப்­பிச்­சென்­றுள்­ள­னர். இரு குழுக்­க­ளுக்கு இடை­யில் ஏற்­பட்­டி­ருந்த மோதலே சம்­ப­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. துப்­பாக்­கிச் சூட்டை கொழும்பு புளு­மெண்­டல் சங்கா தலை­மை­யி­லான பாதாள உல­கக் குழுவே நடத்­தி­யி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது – என்று தெரி­வித்­துள்­ளது. சம்­வ­ப­வம் தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு கிராண்­பாஸ் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.
இதே­வேளை அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தின் தங்­காலை குடா­வெல்ல மீன்­பி­டித்­துறை முகத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 4 பேர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ள­து­டன், 5 பேர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.