ராஜித சேனா­ரத்­ன­வின் ஊழல் வெகு­வி­ரை­வில் அம்­ப­ல­மா­கும்

சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன செய்­துள்ள ஊழல்­களை இன்று அல்­லது நாளை அம்­ப­லப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி (சிறி­லங்கா பொது­ஜன பெர­முன) எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

பத்­த­ர­முல்லை நெளும் மாவத்­தை­யில் அமைந்­துள்ள சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பியால் நிஷாந்த இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
‘‘முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஊழல்­கள் செய்­துள்­ளார் என்று கூறி­வ­ரும் அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன கடந்த அர­சில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்­போது பெரிய ஊழல்­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். அது தொடர்­பி­லான தக­வல்­களை நாளை (இன்று) அல்­லது நாளை­ம­று­ தி­னம் (நாளை) அம்­ப­லப்­ப­டுத்­த­வுள்­ளோம். எம்­மி­டம் அவர் ஊழ­லில் ஈடு­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன.
முடிந்­தால் பேரு­வளை தேர்­தல் தொகு­தி­யில் இம்­முறை அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெற்­றிப்­பெற்­றுக் காட்­டட்­டும். மகிந்த ராஜ­ப­க்ச­வுக்கு ஜம்­பர் அணி­விக்க முயற்­சித்­த­வர்­க­ளுக்கு நாம் ஜம்­பர் அணி­விப்­போம்’’ – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.