பல்கலைக் கழக பகிடிவதையின் பாதகம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவன், கழுத்தறுத்து காயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் நேற்று இரவு
சேர்க்கப்பட்டுள்ளான்.
பகிடிவதை காரணமாகவே மாணவன் உயிர்துறக்க முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
கிளிநொச்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் மூன்று தினங்களுக்கு முன்னர் பளை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளான். மருத்துவரிடம், தூக்க வருவதில்லை என்று
பயந்தவாறு தெரிவித்துள்ளான். மருத்துவர் மருந்துகளை
வழங்கியுள்ளார். மீண்டும் திங்கட்கிழமை மருத்துவமனைக்கு
வருமாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமாலை, உறவினர்களிடம் பல்கலைக்
கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் கதைத்துள்ளான். அதன் பின்னர் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு கழுத்தை அறுத்து உயிர்துறக்க முயற்சித்துள்ளான்.
மாணவனை உறவினர்கள் காப்பாற்றி, பளை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கிருந்து நோயாளர் காவு வண்டி ஊடாக
கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கிளிநொச்சி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை