சிங்கள-முஸ்லிம் சமூகத்திடையே மோதலை ஏற்படுத்த ரணில்

நாட்டிற்குள் சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் மோதல்களை தோற்றுவிக்க தற்போதைய அரசாங்கம் முயல்வதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.


நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”திகனவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அரசியல் பின்னூட்டல் காணப்படுவது தெளிவாகியுள்ளது. இது அரசாங்கம் எவ்வாறு சிங்கள- முஸ்லிம் சமூகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த திட்டமிடுகிறது என்பதை எடுத்தக் காட்டுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார். இத்தருணத்தில் நாட்டை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசாங்கம் விரும்புகிறது.

அதனடிப்படையில், மாவனெல்லையில் அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் காணப்படுகிறது என்பது தெளிவாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.