புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் 23வது தளபதி இவராவார். நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டது.
கடற்படை தளபதியாக இதுவரை பதவிவகித்து வந்த ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க ஓய்வுபெறுவதையடுத்து, புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பியல் டி சில்வா, கடற்படை பிரதி தளபதியாகவும், நடவடிக்கைகள் இயக்குனராகவும் கடமையாற்றினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.