அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உத்தரவாதம் கிட்டுமா?

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று
(திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ள இந்த சந்திப்பு, இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இந்த கலந்துரையாடலில் உரையாடப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னனியினருக்கு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.