வவுனியாவில் பொலிஸ் கொலையைக் கண்டித்து போராட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.


ஈச்சங்குளம், தவசியாகுளம் அ.த.க. பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய இப்போராட்டமானது அமைதியான முறையில் ஈச்சங்குளம் 611 ஆவது இரானுவத் தலைமையகம் வரை பேரணியாக சென்றது.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றம் 611 ஆவது பிரிவின் இராணுவத் தளபதி ஆகியோரிடம் கையளித்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையினை கண்டிக்கிறோம் , 30 வருட யுத்தத்தினால் நாம் துயரப்பட்டது போதும் , ஒன்றுபட்டு எழுந்திடுவோம், பிரதேச அபிவிருத்திக்காக கை கொடுப்போம் , சமாதானத்தினை சீர்குலைப்பவர்களை உடனடியாக கைது செய்” போன்ற வாசகங்களை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.