தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்

தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிலர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பாக நடுநிலை வகிக்குமாறு கூறுகின்றபோதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம்.
பொதுத்தேர்தல் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் இன்று காணப்படும் குழப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
இரண்டு தேசிய கட்சிகளும் தங்களின் ஆட்சியிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றனர். இதில் சிறுபான்மையினரின் நலன்கள் தொடர்பாக அவர்கள் எதுவும் சிந்திக்கப்போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.