மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகுப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சடலத்தின் அருகில் டோர்ச் லைற் ஒன்று கிடைந்ததாக சடலத்தை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna    #Batticaloa

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.