ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமனம்!

இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார்.


ஜனாதிபதி சட்டத்தரணியாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளார்.

25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனம் பெற்றனர். இவர்களில் இரு தமிழர்களும் இரு முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்கும்.38 வருடகாலமாக சட்டத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக ஜனாதிபதி சட்டத்தரணியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் கொண்ட தவராசா, பல்வேறு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டமை, சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கைதிகள் மற்றும் பல ஊடகவியளாளர்களின் விடுதலைக்காக அயராது உழைத்து விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கையின் முதலாவது பயங்கரவாதச்சட்டத்தின் கீழான குட்டிமணி தங்கத்துரை முதல் லக்ஷமன் கதிர்காமர் வழக்கு வரை 38 வருடகால சட்டத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது தமிழ் மக்களுகான பாரிய பங்களிப்பாகும்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo#K.V.Thavaraja

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.