ஐ.தே.க.வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை என கூறப்படுகின்றது.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News #Srilanka #Jaffna #colombo#Ranil #UNP #Maithiri
எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை என கூறப்படுகின்றது.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News #Srilanka #Jaffna #colombo#Ranil #UNP #Maithiri
கருத்துகள் இல்லை