இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆபத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் மனித உரிமை ஆர்வலர்களிற்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தி வருகின்றது.


30 நாடுகளின் மனித உரிமைகள்  நிலரவம் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தரீக் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் மாறிவரும் அரசியல் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிவில் சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் நாங்கள் இருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் இலங்கை அரசியல் நிலவரங்களையும் மனித உரிமை ஆர்வலர்களிற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோமென தரீக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டவாட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் தரப்பினருக்கும் செயற்பட வேண்டியது அவசியமென  அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.