பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.


இதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து நடைமுறைகளும் பின்பற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இந்த விசேட நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் எனவும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நவம்பர் மாதம் வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,609 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.