ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்வெற்றிகொண்டாட்டத்தில்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்ப்பை வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளடங்களாக, உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.