மில்டன் பகுதியில் உள்ள வீட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த கும்பல்

மில்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சட்டவிரோதமாக ஒரு கும்பல் நுழைந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேர்ல் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது 3 முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஆயுதங்களுடன் குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது.

அத்தோடு அங்கிருந்து 50 ஆயிரம் டொலரை அவர்கள் கொள்ளையிட்டு மில் மற்றும் மார்ட்டின் தெருக்களின் ஊடக மேற்கு நோக்கி அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் தொடர்பிலும் விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.