இந்தியா3000கோடிக்கு போர் கருவிகளை கொள்வனவு!

3000 கோடி ரூபாய்க்கு இராணுவ போர்க்கருவிகளை வாங்கும் ஒப்புதல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் குழு கூட்டத்திலேயே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், இந்திய கப்பற்படையிலுள்ள 2 கப்பல்களுக்காக பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்குவது மற்றும் இந்திய இராணுவத்தின் அர்ஜுன் பீரங்கிக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட கருவிகளை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் வகையை சேர்ந்தவை. இவை கப்பல்களில் முதன்மை ஆயுதங்களாக சேர்க்கப்படுகின்றன.

அத்துடன் மீட்பு வாகனங்கள் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தினால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டவை ஆகும்.

இவை போர் காலங்களில் மிகத் திறமையுடனும் வேகமுடன் சேதமடைந்த பீரங்கிகளை சரிசெய்வது மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவது போன்ற உதவிகளைச் செய்யும்.

எனவே இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் 3000 கோடிக்கான இராணுவ போர்க்கருவிகள் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.