சிம்புவுக்கு ஜோடி ரெடி!


சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். பேட்ட, விஸ்வாசம் என இரு முன்னணி நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த
ரேஸில் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. சுந்தர் சி இயக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். அரசியலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது ராஷி கண்ணா இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். சிம்புவுடன் நடிக்கும் இந்தப் படத்தைத் தவிர அயோக்யா, சைத்தான் கே பச்சா ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.