பார்வை ஒன்றினால்
பரவசம் செய்தாய்
போர்வைக்குள் தினம்
உன்முக தரிசனமே .....
வியர்வைக்குள் தோய்ந்து
நினைவுக்குள் நீந்தி
உணர்வுக்குள் வாழ்கின்றது
இதயத்தில் மலர்ந்த காதலும் ....
இரவின் மடியினில்
நிலவு உறங்கும் வேளை
உந்தன் ஞாபகத்தின் ஒளியில்
எந்தன் பயணம் தொடர்கின்றது !
நிவேதா நிவேதிகா
11 - 01 - 2019.
கருத்துகள் இல்லை