முன்னாள் போராளிகள் இருவருக்கு -185 ஆண்டுகள் கடூழியச் சிறை!!

தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நேற்றுத் தீர்ப்பிட்டது அனுராதபுரம் மேல் நீதிமன்றம்.


இலங்கை வானூர்திப் படையின் அட்டனோ-32 ரக வானூர்தியின் மீது வில்பத்து வனப் பகுதியில் வைத்து ஏவுகணையைச் செலுத்தி 37 பேரின் சாவுக்குக் காரணமாக அமைந்தனர் உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுக்களில் தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது

அனுராதபுரம் மேல் நீதிமன்றம். ஒரே தடவையில் 5 ஆண்டுகளில் குறித்த தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன், நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே அவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.