நடிகர் வீடு முன்பு தற்கொலை செய்து கொண்ட ரசிகர்!
கே.ஜி.எஃப் படத்தின் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் யாஷை அவரது பிறந்தநாள் அன்று சந்திக்க முடியாததால் யாஷின் வீடு முன்பு ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் கடந்த 8ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு இவர் தமிழகத்தில் பிரபலமாகி உள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் கன்னட நடிகர் அம்பரிஷ் காலமானதை அடுத்து, அவர் நினைவாக தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பிறந்தநாள் அன்று 26 வயதான ரவி ரகுராம் என்ற அவரது ரசிகர் ஒருவர் யாஷை சந்திக்க அவர் பெங்களூரில் உள்ள யாஷின் வீட்டின் வெளியே காத்திருந்துள்ளார். ஆனால் யாஷ் அப்போது மும்பையில் இருந்திருக்கிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர் தீக்குளித்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து யாஷ் கூறும் போது, "அவர் என்னுடன் முன்பே புகைப்படங்கள் எடுத்துள்ளார். இது ரசிகர் மனோபாவம் இல்லை. அவரை ஒரு ரசிகராக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது போன்று இனி செய்யவே கூடாது என்று எனது ரசிகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது என்னை மிகவும் வேதனைப்பட வைத்திருக்கிறது" என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் கடந்த 8ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு இவர் தமிழகத்தில் பிரபலமாகி உள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் கன்னட நடிகர் அம்பரிஷ் காலமானதை அடுத்து, அவர் நினைவாக தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பிறந்தநாள் அன்று 26 வயதான ரவி ரகுராம் என்ற அவரது ரசிகர் ஒருவர் யாஷை சந்திக்க அவர் பெங்களூரில் உள்ள யாஷின் வீட்டின் வெளியே காத்திருந்துள்ளார். ஆனால் யாஷ் அப்போது மும்பையில் இருந்திருக்கிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர் தீக்குளித்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து யாஷ் கூறும் போது, "அவர் என்னுடன் முன்பே புகைப்படங்கள் எடுத்துள்ளார். இது ரசிகர் மனோபாவம் இல்லை. அவரை ஒரு ரசிகராக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது போன்று இனி செய்யவே கூடாது என்று எனது ரசிகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது என்னை மிகவும் வேதனைப்பட வைத்திருக்கிறது" என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை