மைத்திரி ஆளுநா்கள் திடீர் சந்திப்பு!!
இலங்கையின் 8 மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். அரச தலைவர் செயலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் மாகாணங்களின் தலைமைச் செயலர்களும் பங்கேற்றிருந்தனர்.
சந்திப்புத் தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திற னாகவும் வழங்குவதோடு அரசின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாகத் தலையிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அரச தலைவர் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாகவும் அரச தலைவர் செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனவரி 21 முதல் 28 வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த அரச தலைவர், அவ் வேலைத்திட்டங்களில் தமது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி பங்களிப்புகளை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாகாண முதன்மைச் செய லர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அரச தலைவர் மைத்திரிபால, தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போதைப்பொருள்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார். அத்தகைய சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்காக த்தனது ஆட்சிக் காலத்துக்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனையை தடுப்புக்காக அரசால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலின்போது மீளாய்வு செய்யப்பட்டது.
பெப்ரவரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரையான காலத்தை தேசிய கிராமசக்தி வாரமாக அறிவித்து, 4 ஆயிரம் கிராமங்களுக்கு கிராமசக்தி செயற்திட்டத்தை கொண்டு செல்லும் நோக்கத்தோடு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர்கள் தெளிவுப்படுத்தப்பட்டனர் -– என்றுள்ளது.
சந்திப்புத் தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திற னாகவும் வழங்குவதோடு அரசின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாகத் தலையிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அரச தலைவர் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாகவும் அரச தலைவர் செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனவரி 21 முதல் 28 வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த அரச தலைவர், அவ் வேலைத்திட்டங்களில் தமது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி பங்களிப்புகளை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாகாண முதன்மைச் செய லர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அரச தலைவர் மைத்திரிபால, தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போதைப்பொருள்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார். அத்தகைய சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்காக த்தனது ஆட்சிக் காலத்துக்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனையை தடுப்புக்காக அரசால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலின்போது மீளாய்வு செய்யப்பட்டது.
பெப்ரவரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரையான காலத்தை தேசிய கிராமசக்தி வாரமாக அறிவித்து, 4 ஆயிரம் கிராமங்களுக்கு கிராமசக்தி செயற்திட்டத்தை கொண்டு செல்லும் நோக்கத்தோடு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர்கள் தெளிவுப்படுத்தப்பட்டனர் -– என்றுள்ளது.
கருத்துகள் இல்லை