மைத்­திரி ஆளுநா்கள் திடீர் சந்­திப்பு!!

இலங்­கை­யின் 8 மாகா­ணங்­க­ளுக்­கும் நிய­மிக்­கப்­பட்­டுள்ள புதிய ஆளு­நர்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றுச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற இந்­தச் சந்­திப்­பில் மாகா­ணங்­க­ளின் தலை­மைச் செய­லர்­க­ளும் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

சந்­திப்­புத் தொடர்­பில் அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­க­வும் வினைத்­தி­ற­ னா­க­வும் வழங்­கு­வ­தோடு அர­சின் அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­வ­தற்­காக அனைத்து புதிய ஆளு­நர்­க­ளும் நேர­டி­யாகத் தலை­யி­டு­வார்­கள் என்று எதிர்­பார்ப்­ப­தாக அரச தலை­வர் தெரி­வித்­தார்.

மாவட்ட ரீதி­யா­க­வும் அரச தலை­வர் செய­ல­கத்­தி­னா­லும் செயற்­ப­டுத்­தப்­ப­டும் அபி­வி­ருத்தி செயற்­திட்­டங்­கள் தொடர்­பி­லும் இந்­தச் சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஜன­வரி 21 முதல் 28 வரை­யான காலப்­ப­குதி தேசிய போதைப்­பொ­ருள் ஒழிப்பு வார­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. போதைப்­பொ­ருள் பாவ­னை­யால் ஏற்­ப­டும் சீர்­கே­டு­கள் தொடர்­பில் சமூ­கத்தை விழிப்­பூட்­டும் பல வேலைத்­திட்­டங்­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

அவற்­றுள் பாட­சாலை மாண­வர்­கள், அரச அதி­கா­ரி­கள் மற்­றும் பொது­மக்­களை இலக்­கா­கக்­கொண்டு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள வேலைத்­திட்­டங்­கள் தொடர்­பில் உரிய அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்கு கொண்டு வந்த அரச தலை­வர், அவ் வேலைத்­திட்­டங்­க­ளில் தமது தனிப்­பட்ட கவ­னத்­தைச் செலுத்தி பங்­க­ளிப்­பு­களை வழங்­கு­மாறு ஆளு­நர்­க­ளி­ட­மும் மாகாண முதன்­மைச் செய­ லர்­கள் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளி­ட­மும் வேண்­டு­கோள் விடுத்­தார்.

தொடர்ந்­தும் கருத்து தெரி­வித்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, தான் சுகா­தார அமைச்­ச­ராக பணி­யாற்­றிய கால­கட்­டத்­தில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ராக தம்­மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­க­ளின் கார­ண­மாக ஏனைய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இலங்­கை­யில் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­ட­திட்­டங்­கள் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்­தார். அத்­த­கைய சட்­டங்­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­து­டன், போதைப்­பொ­ரு­ளி­னால் ஏற்­ப­டும் சவால்­களை வெற்­றி­கொள்­வ­தற்­காக த்தனது ஆட்­சிக் காலத்­துக்­குள் சாத்­தி­ய­மான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­ளத் தயா­ராக உள்­ள­தாகத் தெரி­வித்­தார்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் போதைப்­பொ­ருள் பாவ­னையை தடுப்­புக்­காக அர­சால் பல்­வேறு வேலைத்­திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன், அவற்­றின் முன்­னேற்­றம் தொடர்­பா­க­வும் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது மீளாய்வு செய்­யப்­பட்­டது.

பெப்­ர­வரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரை­யான காலத்தை தேசிய கிரா­ம­சக்தி வார­மாக அறி­வித்து, 4 ஆயி­ரம் கிரா­மங்­க­ளுக்கு கிரா­ம­சக்தி செயற்­திட்­டத்தை கொண்டு செல்­லும் நோக்­கத்­தோடு பல வேலைத்­திட்­டங்­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த வேலைத்­திட்­டங்­கள் தொடர்­பி­லும் ஆளு­நர்­கள் தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­ட­னர் -– என்­றுள்­ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.