நள்ளிரவில் கொள்ளை!
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் பல லட்சம் ரூபா பணம், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு மேற்கொண்ட வீட்டு உரிமையாளர், வங்கியிலிருந்து 2 லட்சம் ரூபா பணத்தை நேற்றுமுன்தினம் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவரது வீட்டுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வங்கியில் எடுத்த பணம் எங்கே என்று கொள்ளையர்கள் மிரட்டியதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
‘வீட்டின் முகப்புப் பகுதியில் உரிமையாளரின் தாய் படுத்திருந்துள்ளார். அவரை மிரட்டிய கொள்ளையர்கள், அவர் ஊடாக வீட்டுக் கதவைத் திறக்கச் செய்துள்ளனர். வீட்டினுள் முகங்களை மூடிக்கட்டியவாறு நுழைந்த 4 கொள்ளையர்கள், கைத்துப்பாக்கியைக் காட்டியுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் மீது தாக்கியுள்ளனர். அவர்களை வாள்முனையில் கைகளைக் கட்டி இருத்திய பின்னர் தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டு உரிமையாளரிடம், வங்கியில் இன்று (நேற்றுமுன்தினம்) எடுத்த பணம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அந்தப் பணம் வைத்திருந்த இடத்தை உரிமையாளர் காண்பித்துள்ளார். அதனையும் கொள்ளையடித்துள்ளனர்.
3 அலைபேசிகள், ஒரு உந்துருளி என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்த மற்றைய உந்துருளியின் சில்லை சேதமாக்கியுள்ளனர். சுமார் ஒன்றரை மணிநேரம் அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கி நின்றுள்ளனர்’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வங்கியில் பணம் எடுத்துச் செல்பவர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட மூன்றாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
முறைப்பாடு மேற்கொண்ட வீட்டு உரிமையாளர், வங்கியிலிருந்து 2 லட்சம் ரூபா பணத்தை நேற்றுமுன்தினம் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவரது வீட்டுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வங்கியில் எடுத்த பணம் எங்கே என்று கொள்ளையர்கள் மிரட்டியதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
‘வீட்டின் முகப்புப் பகுதியில் உரிமையாளரின் தாய் படுத்திருந்துள்ளார். அவரை மிரட்டிய கொள்ளையர்கள், அவர் ஊடாக வீட்டுக் கதவைத் திறக்கச் செய்துள்ளனர். வீட்டினுள் முகங்களை மூடிக்கட்டியவாறு நுழைந்த 4 கொள்ளையர்கள், கைத்துப்பாக்கியைக் காட்டியுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் மீது தாக்கியுள்ளனர். அவர்களை வாள்முனையில் கைகளைக் கட்டி இருத்திய பின்னர் தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டு உரிமையாளரிடம், வங்கியில் இன்று (நேற்றுமுன்தினம்) எடுத்த பணம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அந்தப் பணம் வைத்திருந்த இடத்தை உரிமையாளர் காண்பித்துள்ளார். அதனையும் கொள்ளையடித்துள்ளனர்.
3 அலைபேசிகள், ஒரு உந்துருளி என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்த மற்றைய உந்துருளியின் சில்லை சேதமாக்கியுள்ளனர். சுமார் ஒன்றரை மணிநேரம் அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கி நின்றுள்ளனர்’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வங்கியில் பணம் எடுத்துச் செல்பவர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட மூன்றாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை