வவுனியாவில் இரு துருவங்கள் சந்திக்கும் கடினபந்து இறுதி போட்டி.

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடின பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி  இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில்  ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட கடினபந்து துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யோ.ரதீபன்  தலமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், துடுப்பாட்ட சங்கங்களின் நிர்வாகிகள்  உறுப்பினர்கள், விளையாட்டு பயிற்று விப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனா்.
யாழ் மாவட்ட அணியினருக்கும் வவுனியா மாவட்ட அணியினருக்கும் இடையேயான இரு துருவங்கள் என்று கூறும்படியான இவ் இறுதி போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியது.
இதேவேளை இவ் இறுதி போட்டியின் நிறைவில் பரிசளிப்பு நிகழ்வுகள்  சிறப்பாக இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.