வீடமைக்கும் பணிகள் ஆரம்பம்
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
4 ஆயிரத்து 750 வீடுகள் அமைப்பதற்கான நிதி மாவட்டச் செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் தைப்பொங்கலுடன் – நாளை ஆரம்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் 10 லட்சம் ரூபாவில் அமைக்கப்படும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களும், கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும், வவுனியாவில் 450 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கொண்ட குடும்பங்கள், சமூகமயமாக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், வருமானம் குறைந்த குடிசைகளில் வாழும் குடும்பங்கள், கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வயோதிபர்கள், இளம் சிறார்களைக் கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவு முன்னுரிமைப்படுத்தப்படும்.
இந்த வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் பயனாளிகளால் கட்டப்படுகின்ற வீடுகளாகவும், செங்கல் மற்றும் சீமெந்தினாலான இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமயலறை, மற்றும் கழிவறையை உள்ளடக்கியதாகவும் ஓட்டினால் ஆன கூரைகளாகவும் அமைவது கலாசாரத்துக்கு அமைவானதாகவும் காணப்படுகின்றன.
மாவட்ட செயலாளர்கள் ஊடாகவும் பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவற்றிக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் – என்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை