கூட்டமைப்பு எதிர்க்கட்சிக்கான சலுகையைப் பெறக்கூடாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சிக்கான சலுகைகளை வழங்கக் கூடாது என்று அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளோம்
என்று தெரிவித்துள்ளார் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயக் கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-
அவர் தெரிவித்ததாவது-
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை, தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தமை என பல்வேறு சாதனைகளை இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, அமைச்சரவையின் முடிவுகளைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசித்துதான் அரசு மேற்கொள்கின்றது என்று கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ, வடக்கு அபிவிருத்தி அமைச்சை தமது வேண்டுகோளுக்கு இணங்கவே ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டார் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் இந்த அரசின் பங்காளியாகவே கருத வேண்டும். இப்படியானவர்களுக்கு இனியும் எதிர்க்கட்சியில் இருக்க தகுதியில்லை.
இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு கட்சி இருந்ததில்லை. அதனால் நாடாளுமன்றத்தின்போது எதிர்க்கட்சி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும், எதிர்க் கட்சியாக விவாதத்தில் உரையாற்றவும் நாம் இந்தக் கட்சிக்கு இனியும் இடமளிக்கப்போவதில்லை.
அடுத்த அமர்வுக்குகு முன்னர் இதுதொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசின் பங்காளியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரவுள்ளோம்.- என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை