தீப்பிடித்து எரிந்த கார்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

சென்னையில் நடுரோட்டில் கார் தீ்ப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வாடகை கார்கள் சேவையை வழங்கிவரும் பிரபல தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கார் ஒன்று, நேற்று நள்ளிரவு, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் பயணித்துக்கு கொண்டிருந்தது.

அப்போது, காரின் பின்பக்கத்திலிருந்து கரும்புகை வாசம் வருவதை அதில் பயணித்த பெண் பல்லவி சிங் உணர்ந்துள்ளார். உடனே அவரும், அவரது சகப் பயணியும் காரை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கிய அடுத்த கணமே, அந்த கார் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பல்லவி சிIங் ,"இந்த பயங்கரமான தருணம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.