பிரித்தானியா ஐ.நா.தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் ஆதரவு!

பிரித்தானியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரித்தானியாவின் ஆசிய பசுபிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் லண்டனில் வரவேற்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் மார்க் பீல்ட்டை சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையில் அண்மைய அரசியல் நிலைமை பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாகவும் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30:1, 34:1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.