நீதிமன்றத்தில் போர் வீரர்களை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை!

ஐக்கிய தேசியக் கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாகப் பிளவுபட இடமளிக்காது என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பலங்கொடை பகுதியில்  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஒருமித்த நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியே தீரும்.

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுமதியளிக்காத காரணத்தால் இன்று எந்தவொரு குற்றவாளிக்கும் சர்வதேச தண்டனை கிடைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டை பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்க போவதில்லை என்று கஹவத்தவில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்திருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.