யாழில் இடம்பெற்ற படகு பொங்கல் விழா

யாழ்.கெற்பேலி மற்றும் கச்சாய் பகுதிகளில் நேற்றய தினம் படகு பொங்கல் விழா வெகு விமரிசையாக இடம் பெற்றிருக்கின்றது.


உழவர் திருநாளான தை 15ம் திகதி உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் உலகெங்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவும் மாடுகளுக்கான பட்டி பொங்கல் கொண்டாடப்பட்டது. அதே போல் மீனவர்களுக்கு

உதவும் படகுகளுக்கும் பொங்கல் விழா நடாத்தும் மரபு யாழ்ப்பாணத்தில் இருந்துவருகின்றது. அதற்கமைய நேற்று கெற்பேலி,

கச்சாய் போன்ற இடங்களில் மீனவர்கள் படகு பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.