தேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் தமிழகம்

தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் ஈ பிரிவு லீக்கில் பாட்டியாலாவும், எப் பிரிவில் எப்.சி.ஐ.அணியும், ஜி பிரிவில் தமிழக அணியும், எச் பிரிவில் சாய் அணியும் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. (டிச.17)
காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டி ஒன்றில் தமிழகம், பி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.எஸ்.பி.அணியுடன் மோதுகிறது. சென்னையில் 9வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப்பின் போட்டி நடைபெற்று வருகினறது. இதில் எச் பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் கூர்க் அணியும், அகில இந்திய போலீஸ் அணியும் மோதின. மொத்தம் 6 அணிகள் கொண்ட இப்பிரிவில் முன்னதாக கூர்க் அணி 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 3 வெற்றி 1 டிரா செய்து 10 புள்ளிகள் பெற்றிருந்தது. போலீஸ் அணி 3 வெற்றியும் 1 தோல்வியும் கண்டு 9 புள்ளிகளுடன் மோதியது. எப்படியும் வெற்றி கண்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் இரு அணிகளும் ஆடின. ஆனால் இந்த ஆட்டம் முடியும் வரை இரு அணிகளுமே கோல் போடாமல் சமநிலையில் முடிந்ததால் தலா 1 புள்ளிகளை பகிர்ந்தன.
இதனையடுத்து, அடுத்த லீக் ஆட்டம் சூடுபிடித்தது. அதில் சாய் அணியும், மத்திய பாரத் அணியும் மோதின. முன்னதாக சாய் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி 1 டிரா கண்டு 10 புள்ளி பெற்றிருந்ததால், இந்த எச் பிரிவின் கடைசி லீக் ஆட்டமான இதில் வெற்றி கண்டால் மட்டுமே் காலிறுதிக்கு தகுதி பெறு முடியும். அதற்கேற்ப இந்த அணி 2க்கு0 என வெற்றி கண்டு காலிறுதிக்குள் நுழைந்தது. ஈ பிரிவு அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி அணியும், பாட்டியாலா அணியும் மோதின. முன்னதாக 2 வெற்றி ஒரு டிரா கண்டு 7 புள்ளிகள் பெற்றிருந்த பாட்டியாலா அணி இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு நுழைய முடியும் என்ற நிலையில், பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-3 என டெல்லியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் மொத்தம் 10 புள்ளிகளுக்கு உயர்ந்து இப்பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.