மிசிசாகா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்

மிசிசாகாவில் உள்ள கிரெடிட் வொல்லி வைத்தியசாலையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 6 மணியளவில் ஆணொருவர் தொடர்பினை ஏற்படுத்தி வைத்தியசாலையில் எங்கேயோ ஒரு குண்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வைத்தியசாலையில் இடம்பெறும் சிகிச்சையில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று பீல் பிராந்திய பொலிஸார் டுவிட் செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் வாகன மற்றும் பேருந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக விசாரணை தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

இதன்காரணமாக அந்தநேரத்தில், வைத்தியசாலைக்கு உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் உதவியுடன் வைத்தியசாலையில் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் அங்கு வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

இதன் பின்னர் வைத்தியசாலைப் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியதாக தெரிவித்த பீல் பொலிஸார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.