சீனாவை சமாளிக்க லே பகுதியில் படைகள் குவிப்பு

இந்தியா - சீனா எல்லை பகுதியை ஒட்டிய சர்வதேச எல்லையில், சீன ராணுவத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


இதையடுத்து, சீன ராணுவத்தின் ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், எல்லையை பலப்படுத்தி, அந்நாட்டு வீரர்கள் ஊடுருவாமல் தடுக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எல்லை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாரை, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் பணியமர்த்த, திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, சண்டிகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்த வீரர்களை, லே பகுதிக்கு அனுப்பி, ராணுவத்திற்கு பக்கபலமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி தலைமையில், இந்த படையினர், எல்லை பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். வரும், ஏப்., 1 முதல், இந்த படையினர், லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.