ஊழலை விசாரிக்க ஆணைக்குழு!!
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் தலைமையிலான கூட்டு அரசில் இடம்பெற்றன என்று கருதப்படும் ஊழல் களை விசாரிப்பதற்காகத் தானே ஆணைக்குழுவை அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்றன என்று கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு நேற்று நியமிக்கப்பட்டது என்று அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, எல்.ஆர்.டி.சில்வா மற்றும் கே.ஏ.பிரேமதிலக, விஜே அமரசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய அரச தலைவரால் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கூட்டு அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்றன என்று கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு நேற்று நியமிக்கப்பட்டது என்று அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, எல்.ஆர்.டி.சில்வா மற்றும் கே.ஏ.பிரேமதிலக, விஜே அமரசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய அரச தலைவரால் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கூட்டு அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை