சீன வங்கி300 மில்லியன் டொலர்ள் இலங்கைக்கு வழங்குகிறது!
தனது கடன் தொகையில் 5.9 பில்லியன் டொலரை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. இதில், 2.6 பில்லியன் டொலர் வரும் மார்ச் மாதத்துக்குள் திரும்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
இதில், 1 பில்லியன் டொலர் மாத்திரம், திரும்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீன வங்கி இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளது.
அதேவேளை, சீன வங்கி வழங்க முன்வந்துள்ள கடனுக்கு மேலதிகமாக 700 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு, இலங்கை அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பதில் நிதியமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை