கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஒன்பது மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான், ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது குறித்த மீனவர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.