அமெரிக்க குடியுரிமை தொடா்பாக கோத்தபாய அளித்த பதில் !!
ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்துக் கொள்வதும் நீக்கிக் கொள்வதும் என் தனிப்பட்ட விடயம்.
இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லைஎன்று தெரிவித்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைக்கு நேற்று வியாழக்கிழமை மேல் நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பாகக் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோத்தபாய இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘குடியுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனைக் கட்டிவைக்க முடியாதுதானே?. ஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையைக் கட்டிவைக்க மாட்டார்கள்’ என்றார்.
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வெளிவந்தவண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது. கோத்தபாய அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டு வருகின்றது. இத்தகையதொரு பின்னணியிலேயே கோத்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டு அரசில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை, இரட்டைக் குடியுரிமை காரணமாக பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லைஎன்று தெரிவித்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைக்கு நேற்று வியாழக்கிழமை மேல் நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பாகக் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோத்தபாய இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘குடியுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனைக் கட்டிவைக்க முடியாதுதானே?. ஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையைக் கட்டிவைக்க மாட்டார்கள்’ என்றார்.
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வெளிவந்தவண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது. கோத்தபாய அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டு வருகின்றது. இத்தகையதொரு பின்னணியிலேயே கோத்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டு அரசில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை, இரட்டைக் குடியுரிமை காரணமாக பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை